(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேசாளை
பேசாளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 51 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கிண்ணியா மற்றும் பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.
சந்தேகநபர்கள் மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பேசாளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கிருலப்பனை
கிருப்பலனை -பொல்ஹேன்கொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 6 கிலோ 135 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM