(எம்.மனோசித்ரா)
சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளமைக்கான பிரதான காரணம் டொலர் தட்டுப்பாடாகும் என்று மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணிகள் தொடர்பிலும் மத்திய வங்கி வெளிப்படுத்தியுள்ளது.
அதற்கமைய சட்ட ரீதியான வங்கி முறைமைகளுக்கு அப்பால் உண்டியல் மற்றும் ஹவாலா முறைமை ஊடாக பணப்பறிமாற்றம் இடம்பெறுகின்றமை மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்களினால் வெவ்வேறு அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வங்கி முறைமையின் ஊடாக அன்றி சட்டத்திற்கு முரணான முறைமைகளைக் கையாளுதல் என்பன பிரதான காரணிகளாக மத்திய வங்கியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய வங்கி ஆளுனரின் கோரிக்கைக்கு அமைய மேற்கூறப்பட்ட காரணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ்மா அதிபரினால் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமித்து , குறித்த விசாரணை நடவடிக்கைகளை மேலும் பரந்தளவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர , சட்டத்திற்கு முரணான டொலர் பரிமாற்றத்தினை தடுப்பதற்காக 2006 இல 5 நாணய சுத்தீகரிப்பு சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் உறுப்புரைகளில் டொலரைப் பெற்றுக் கொண்ட முறைமையை அறிந்து கொள்வதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM