கோப் , கோபா குழுக்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க தயங்குவது ஏன் ? - சஜித் கேள்வி

Published By: Digital Desk 5

28 Aug, 2022 | 03:31 PM
image

(எம்.மனோசித்ரா)

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதற்கு அஞ்சுவதற்கான காரணம் என்ன? இவற்றின் தலைவர்களாக எதிர்க்கட்சியினர் நியமிக்கப்பட்டால் கொள்ளையர்கள் இனங்காணப்படுவார்கள் என்பதற்காகவே பொதுஜன பெரமுனவினர் இதற்கு தடையாகவுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிகவரெட்டிய தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தற்போது சர்வகட்சி அரசாங்கம் என்ற புதிய ஏமாற்று வேலைத்திட்டம் தொடர்பில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

ஆனால் எமக்கு அமைச்சுப்பதவிகள் வேண்டாம் என்றும் , பாராளுமன்றத்திலுள்ள பிரதான தெரிவுக்குழுக்களின் தலைவர் பதவியை வழங்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

இது சிறந்த முறைமையாகும். அதற்கமைய அமைச்சரவை ஒருபுறமும் செயற்பட, எதிர்க்கட்சி மறுபுறம் அந்தக் குழுக்களின் தலைமைத்துவத்தை ஏற்று செயற்படும்.

கடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டது. எனினும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் ஏமாற்று வேலையை இதன் ஊடாக அவதானிக்க முடிகிறது. நிலைமை தீவிரமடைந்த போது , பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியை தெரிவு செய்தனர்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் அதே சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள் நீக்கப்படுகின்றனர்.

அத்தோடு கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடியாது என்றும் பொதுஜன பெரமுனவினர் கூறுகின்றனர்.

கோப் , கோபா குழுக்களின் ஊடாகவே கொள்ளையர்கள் இனங்காணப்படுவார்கள். அவ்வாறான கொள்ளைகளை ஆராய்வதற்கும் பொதுஜன பெரமுனவினரே நியமிக்கப்பட வேண்டும் என்கின்றனர்.

பொதுஜன பெரமுனவின் கொள்ளையர்கள் பெயர் பட்டியலொன்றை தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாரிய கொள்ளையர்களின் பட்டியலே அமைச்சுப்பதவிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தூய்மையானதொரு எதிர்க்கட்சி என்ற ரீதியில் , நாட்டிலுள்ள ஒரேயொரு மாற்று அரசாங்கம் என்ற ரீதியில் இந்த கொள்ளையர்களுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் வகிப்பதற்கான தார்மீக உரிமை எமக்கு காணப்படுகிறதா? என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49