விந்து அடங்­கிய ஆணு­றை­களை வகுப்­புக்கு கொண்­டு­வ­ரு­மாறு உத்­த­ர­விட்ட ஆசி­ரியை இடை­நி­றுத்தம்

Published By: Vishnu

26 Aug, 2022 | 12:07 PM
image

விந்து அடங்­கிய ஆணு­றை­களை வகுப்­புக்கு கொண்­டு­வ­ரு­மாறு கூறிய ஆசி­ரியை ஒருவர்  பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.

மரியா இனேஸ் பெரேடோ எனும் இந்த ஆசி­ரியை, தென் அமெ­ரிக்க நாடான பொலி­வி­யா­வி­ன் மினேரோஸ் நகரிலுள்ள பாட­சா­லை­யொன்றில் பாலியல் கல்வி கற்­பிக்கும் ஆசிரி‍யையாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தவர்.

இவர் தனது வகுப்­பி­லுள்ள ஆண் மாண­வர்கள், அவர்­களின் விந்து நிறைந்த ஆணு­றை­களை வகுப்­புக்கு கொண்­டு­வ­ரு­மாறு அண்­மையில் அறி­வு­றுத்­தினார்.

பாலியல் கல்­வியின் ஒரு அங்­க­மாக, ஆண் இனப்­பெ­ருக்கத் தொகுதி தொடர்­பான பாடத்­துக்­காக இவ்­வாறு ஆசி­ரியை மரியா பெரோடோ கூறி­னாராம்.

இவ்­வி­டயம் குறித்து மாண­வர்­களின் பெற்றோர் ஆத்­தி­ர­ம­டைந்­தனர். இளம் மாண­வர்­களின் மனங்­களை மோச­மாக்­கு­கிறார் என ஆசி­ரியை மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது. 

'வீட்­டு­வே­லை­யாக' விடுக்­கப்­பட்ட இந்த உத்­த­ரவை மாண­வர்கள் பின்­பற்­ற­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இந்­நி­லையில், ஆசி­ரியை மரியா பெரேடோ மன்­னிப்பு கோரி­யுள்ளார்.

அதே­வேளை, தான் நெறி­பி­றழ்ந்த ஒருவர் அல்லர் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இது தொடர்­பாக ஆசி­ரியை  மரியா பெரேடா மேலும் கூறு­கையில், 'நான், 4 சிறிய பிள்­ளை­களைக் கொண்ட குடும்­பத்தின் தாய். 

ஈர­மான இட­மொன்றில் அல்­லது சூழலில் விந்­த­ணுக்கள் எவ்­வ­ளவு நேரம் உயி­ருடன் இருக்கும் என்­பதை ஓர் ஆசி­ரி­யை­யாக விளக்­கு­வதே எனது நோக்கம். சில ஊட­கங்கள் கூறு­வதைப் போல் நான் நெறி­பி­றழ்ந்­தவள் அல்ல. 

கர்ப்­ப­ம­டை­வதை தவிர்க்க வேண்­டு­மானால் இப்­பொ­ருளை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும் என மாண­வி­க­ளுக்கு எச்­ச­ரிப்­பதும் இப்­பா­டத்தின் நோக்­க­மாக இருந்­தது. நான் எவ­ரையும் கொல்­ல­வில்லை, பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­த­வில்லை.  

பாலியல் கல்வி போதித்­த­மைக்­காக நான் சிறைக்கு செல்ல வேண்­டு­மென்றால், நான் தவறு செய்­தி­ருந்தால், மினேரோஸ் மற்றும் பொலீ­வியா மக்­க­ளிடம் மன்­னிப்பு கோரு­கிறேன்' எனத் தெரி­வித்­துள்ளார். 

பொலிஸ் அதி­காரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், தற்போது நாம் மாணவர்களை உளவியல் ரீதியாக நேர்காணல் செய்து வருகிறோம். இதன் பெறுபேறு அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தீர்மானிக்கப் படும்' எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right