சிறுநீர் கழிப்­ப­தற்­காக விழித்­தெ­ழுந்த இளைஞர் சவப்­பெட்­டிக்குள் அடை­பட்­டுள்­ளதை அறிந்து அதிர்ச்சி மனிதப் பலி­யாக உயி­ருடன் புதைக்­கப்­பட்­ட­தாக கூறு­கிறார்

Published By: Vishnu

26 Aug, 2022 | 10:25 AM
image

சிறுநீர் கழிப்­ப­தற்­காக விழித்­தெ­ழுந்த இளைஞர் ஒருவர், சவப்­பெட்­டி­யொன்­றுக்குள் தான் அடைக்­கப்­பட்­டுள்­ளதை அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் பொலீ­வியால் இடம்­பெற்­றுள்­ளது.

விக்டர் ஹியூகோ மிக்கா அல்­வாரெஸ் எனும் 30 வய­தான இளைஞர், மனிதப் பலி கொடுப்­ப­தற்­காக தான் உயி­ருடன் புதைக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

தென் அமெ­ரிக்க நாடான பொலீ­வி­யாவின் எல் அட்டோ நகரில் அண்­மையில் நடை­பெற்ற பூமி மாதா திரு­வி­ழாவை பார்­வை­யி­டு­வ­தற்குச் சென்­றி­ருந்த வேளையில் இந்­நி­லையை தான் எதிர்­கொண்­ட­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

பொலி­வி­யாவில் வரு­டாந்தம் ஆகஸ்ட் மாதம் பூமி மாதா திரு­விழா நடை­பெறும். பூர்­வீக குடி­மக்கள் 'பச்­ச­மமா' எனும் பூமி மாதா­வுக்கு பூஜைகள் செய்து இவ்­வி­ழாவை கொண்­டா­டுவர். 

தீமூட்டி, மிருகக் கொழுப்பு, மூலிகைத் தாவ­ரங்கள், முட்­டைகள், இனிப்­புகள் உட்­பட பல்­வேறு பொருட்­களைப் படைத்து பச்­ச­ம­மாவை மக்கள் வழி­ப­டுவர்.

எல் அட்டோ நகரில் திரு­விழா பார்க்கச் சென்ற விக்டர் ஹியூகோ, இரவில் மது அருந்தி நட­ன­மாடிக் கொண்­டி­ருந்த பின் உணர்­வி­ழந்து உறங்­க­விட்ட பின்னர் சவப்­பெட்­டி­யொன்­றுக்குள் அவர் விழித்­தெ­ழுந்­தாராம்.

இது தொடர்­பாக விக்டர் ஹியூகோ மிக்கா அல்­வாரெஸ் கூறு­கையில்,  

"விழா ஆரம்­ப­மா­கு­வற்கு முன் இரவில் நாம் நட­ன­மாட சென்­றி­ருந்தோம்.  அதன்பின் நடந்­தவை எனக்கு நினை­வில்லை. 

எனக்கு நினைவில் உள்ள விடயம் என்­னவென்றால், நான் படுக்­கையில் 

இருப்­ப­தாக எண்­ணி­ய­துடன், சிறுநீர் கழப்­ப­தற்­காக எழ முயன்றேன். ஆனால் என்னால் நகர முடி­ம­ய­வில்லை.

கண்­ணாடி பெட்­டிக்குள் நான் அடைக்­கப்­பட்­டி­ருப்­பதை உணர்ந்தேன். கண்­ணா­டிக்கு மேல் மண், சேறு மூடி­யி­ருந்­தன.

என்னால் கண்­ணா­டியை உடைக்க முடிந்­தது. கண்­ணா­டியை உடைத்­த­வுடன் மண் உள்ளே வர ஆரம்­பித்­தது. கண்­ணா­டியை தள்ளி நான் வெளியே வந்தேன். 

அதன் பின்னர் நான் பொலிஸ் நிலையம் சென்று எனக்கு நடந்­ததை தெரி­வித்தேன், ஆனால் நான் கூறு­வதை அவர்கள் நம்ப மறுத்­தனர். 

நான் அப்­போதும் மது­போ­தையில் இருப்­ப­தாக அவர்கள் எண்­ணினர். வீட்­டுக்குச் சென்று போதையை தெளியச் செய்­து­கொள்­ளு­மாறு அவர்கள் கூறினர்' என்றார்.

எனினும், பின்னர் அவர் ஊட­கங்­க­ளிடம் தனது கதையை கூறினார்.

தான் மது அருந்­திக்­கொண்­டி­ருந்த இடத்­தி­லி­ருந்து 50 மைல் தொலை­வி­லுள்ள அச்­சாச்சி எனும் இடத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்டு, அங்கு புதைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும், பச்­ச­ம­மா­வுக்கு மனிதப் பலி கொடுப்­ப­தற்­காக தான் புதைக்­கப்­பட்­டதில் சந்­தே­க­மில்லை எனவும்  விக்டர் ஹியூகோ மிக்கா அல் வரெஸ் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்