உல்லாசப் பூங்காவொன்றின் ராட்டிணத்தில் பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 வயதான டேவிட் டேவிஸ், ஹீதர் ஜோன்ஸ்டன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒஹையோ மாநிலத்திலுள்ள உல்லாசப் பூங்காவொன்றின் பாரிய ராட்டிணத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பாலியல் உறவுகொண்டனர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களின் ஒழுக்கக்கேடான நடவடிக்கைக்கு பல சாட்சிகள் உள்ளனர் எனவும், அவர்களில் சிலர் சிறார்கள் எனவும் சான்டஸ்கி நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்மை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை இவர்கள் அறிந்திருந்தனர் எனவும், அப்போதும் இவ்விருவரும் தமது நடவடிக்கையை தொடர்ந்தனர் எனவும் சாட்சியாளர்கள் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரித்தபோது, ஆரம்பத்தில் இவர்கள் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தவறிவிழுந்த சிகரெட் பக்கெட் ஒன்றை தான் எடுப்பதற்கு முயன்றதாகவும் தனக்கு டேவிஸ் உதவ முயன்றார் எனவும் ஹீதர் ஜோன்ஸ்டன் கூறினார். எனினும், ராட்டிணத்தில் பாலியல் உறவில் ஈடுபட்டதை இவர்கள் பின்னர் ஒப்புக்கொண்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM