நாட்டின் 3 பகுதிகளில் இன்று 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
எல்பிட்டிய
எல்பிட்டிய - உரகஸ்மன்சந்தி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா
கம்பஹா - மாக்கவிட்ட, குருச சந்தியில் இன்று 24 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரினால் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 34 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அஹூங்கல்ல
காலி - அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அஹூங்கல்ல -உரகஹ வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டில் அஹுல்ல கல்வெஹர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இவ்வாறு துப்பாக்கிப்பரயோகத்தை மேற்கொண்டு , அங்கிருந்து தப்பிச்செனறுள்ளனர். சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM