பிரபல சின்னத்திரை நடிகையான சபர்ணா நேற்றுமுன் தினம் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவர் இறந்து மூன்று நாட்கள் கடந்திருக்கும் என்றும் நிர்வாண நிலையில் கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்காலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொலிஸார் சபர்ணா அறையை சோதனை செய்ததில் மதுபாட்டில்கள், சிகரெட் துண்டுகள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான தடயமும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சபர்ணாவுக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால், அவர் இந்தி சினிமாவுக்கு செல்லவிருந்ததாகவும், இதன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள சினிமா பிரமுகரான நவீன் என்பவரை சந்தித்ததாகவும், அவரை காதலித்ததாகவும் கூறப்படுகிறது.
அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கடைசியாக பேசியுள்ளார். அவரிடம் தான் டெல்லியில் சென்று அங்கு நிரந்திரமாக தங்க போகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் 20,000 ரூபாய் கடன் கேட்டதாகவும், அவர் அந்த பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதனால் அவரது வீட்டிற்கு அந்த ஆண் நண்பர் அல்லது காதலர் யாராவது வந்திருக்கலாம், அதன்பின் சபர்ணா உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் அவருடைய அறையை சோதனை செய்ததில் அவர் தொடர்பான டைரி கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM