ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்த வழக்கு ஒத்திவைப்பு : நாளை மீளவும் விசாரணை

Published By: Digital Desk 4

22 Aug, 2022 | 09:16 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அடிப்படைவாதப்போதனைகளை செய்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் அல்-சுஹைரியா அரபுக்கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கு இன்று (22) திறந்தமன்றில் விசாரணைக்கு வரவில்லை.

இந்த வழக்கில் அரச தரப்பின் சார்பில் ஆஜராகும் சட்டவாதிகளுக்கு சமூகமளிக்க முடியாதநிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

எவ்வாறாயினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவின் பிரகாரம் வழக்கானது நாளை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என புத்தளம் மேல் நீதிமன்றம் வழக்கின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்த வழக்கானது புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென கடந்த ஜுன் 10 ஆம் திகதி விசாரணையின் பின்னர் அறிவிக்கப்பட்டது.

இதன்போது வழக்குத்தொடுனர் தரப்பின் ஏனைய சாட்சியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்களென நீதிமன்றம் அறிவித்திருந்தது. அவ்வாறான நிலையில் சில சாட்சியாளர்களுக்கும் மன்றில் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் வழக்கில் ஆஜராகும் அரச தரப்பின் சட்டவாதிகளுக்கு நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக முடியாதநிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனினும் நாளை திட்டமிட்டபடி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் அரச சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி ஹிரிஹாகம ஆகியோர் ஆஜராகி சாட்சி நெறிப்படுத்தலை முன்னெடுக்கின்றனர். பிரதிவாதிகள் இருவர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ தலைமையிலான குழுவும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையிலான குழுவும் ஆஜராகின்றனர்.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம்  எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில்  பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ' இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்  நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.' என  கூறி இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக  மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக  பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக  சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்தோடு,  பலஸ்தீன் - இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக  வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம்  உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின்  கீழ்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர்   சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58