தாய்வான் மக்களை விட அவுஸ்திரேலிய மக்கள் சீனாவின் தாக்குதல் குறித்து அச்சமடைந்துள்ளனர்.
புதிய கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பத்தில் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை தனது நாட்டை சீனா தாக்கும் என அச்சம்கொண்டுள்ளதை புதிய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது இது தாய்வானியர்கள் மத்தியில் காணப்படும் அச்சத்தை விட அதிகமாகும்.
எதிர்காலத்தில் சீனா தாய்வான் மீது தாக்குதலை மேற்கொள்ளும் என நாலில் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை கருதுவதையும் த இன்ஸ்டியுட்டின் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகார திட்டத்தின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
தாய்வானில் இருபதில் ஒருவரே அவ்வாறு கருதும் நிலை காணப்படுகின்றது.
சீனாவுடன் அமைதியான உறவுகளை பேணமுடியாவிட்டால் தாய்வான் சுதந்திர நாடாக மாறவேண்டும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 70 வீதமான அவுஸ்திரேலியர்களும் தாய்வான் மக்களும் கருத்துவெளியிட்டுள்ளனர்.
சீனா குறித்தும் யுத்தத்திற்கான வாய்ப்பு குறித்தும் அச்சநிலை அதிகரிப்பதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவும் தாய்வானும் சீனாவிற்கு எதிரான யுத்தத்தில்தோல்வியடையும் என இரு நாடுகளையும் சேர்ந்த 60 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் நாட்டை சீனாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் என பெண்களை விட ஆண்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளனர்.
85 வீதமான அவுஸ்திரேலியர்களும் 80 வீதமான தாய்வான் மக்களும் சீனாவை ஆக்கிரமிப்பு குணம் நிரம்பிய நாடு என கருதுகின்றனர்.
ஆனால் இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் அமெரிக்காவே ஆக்கிரமிப்பு நாடு என கருதுவதும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
சமாதானத்தை பேணுவதற்காக சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவது அனைவரினதும் நலனிற்கும் உகந்த விடயம் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM