பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரம் ஆற்றிய மிகவும் உணர்ச்சிவசமான உரையின் போது இம்ரான் கான் பொலிஸார் மற்றும் நீதவானிற்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்தார் என்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து பொலிஸார் அவருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இம்ரான்கான் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை அவர் இதுவரை தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.அவரது ஆதரவாளர்கள் பொலிஸார் அவரை கைதுசெய்வதை தடுப்பதற்காக பெருமளவில் அவரது இல்லத்தின் அருகில் குவிந்திருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்பிரலில் அதிகாரத்தை இழந்த இம்ரான்கான் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆதரவுடனான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருகின்றார், அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு முயல்வதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை இஸ்லாமபாத்தில் ஆற்றிய உரையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் நீதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்ததுடன் தனது நெருங்கிய சகாவொருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டியிருந்தார்.
இம்ரான்கானின் இந்த உரையை நீதவான் அலி ஜாவிட் என்பவர் பேரணியில் நின்றபடி செவிமடுத்தார் என பொலிஸார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நீங்களும் இதற்கு தயாராகுங்கள் நாங்களும் நடவடிக்கை எடுப்போம் நீங்கள் அனைவரும் வெட்கப்படவேண்டும் என இம்ரான்கான் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
பொலிஸார் நீதவானை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்;டு காரணமாக இம்ரான்கான் நீண்டகால சிறையில் அடைபடும் ஆபத்தை எதிர்கொள்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM