(எம்.மனோசித்ரா)
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை சவாலுக்கு உட்படுத்தாவிட்டாலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சாரசபை என்பவற்றை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எந்த காரணத்திற்காகவும் கைவிடப் போவதில்லை என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சகல அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடைய பெற்றோலியத்துறை தொழிற்சங்கள் இன்று திங்கட்கிழமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பவற்றின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சகல தொழிற்சங்கங்களுடனும் கடந்த வாரம் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு , அவை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் உத்தேச மறுசீரமைப்புக்களுக்கு எதிராக 22 ஆம் திகதி திங்கட்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM