பொதுஜன பெரமுனவின் தேவைகளை தற்போது ஜனாதிபதி ரணில் நிறைவேற்றுகிறார் - ஹிருணிகா

Published By: Vishnu

21 Aug, 2022 | 02:24 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்ட சில குழுக்கள் செய்த நாசகார செயல்களை போராட்டகாரர்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் தேவைகளை தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

20 ஆம் திகதி சனிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,

தற்போது பொதுஜன பெரமுனவின் தேவைகளையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அவர்கள் கோபத்திலுள்ளனர்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் ஏதாவது ஒரு நெருக்கடிகளை உருவாக்கி, அவற்றை தமக்கேற்ற விதத்தில் பிரசாரம் செய்து அதனைக் கொண்டு அரசியல் இலாபமீட்டுகின்றனர்.

அதற்கமைய வீடுகள் தீ வைக்கப்பட்டமை உள்ளிட்ட நாசகார செயல்களை மேற்கொண்ட அனைத்து குற்றங்களையும் அமைதியான போராட்டகாரர்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கேள்விகளிலிருந்து அதனை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டங்களை மேற்கொண்ட இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம். தற்போதுள்ளவர்கள் சரியான தலைவர்கள் என்றால் இந்நேரத்தில் இளைஞர் யுவதிகளின் எழுச்சி தொடர்பில் மகிழ்ச்சி அடைய வேண்டும். மாறாகக் கோபமடைக் கூடாது. எவ்வாறிருப்பினும் போராட்டங்கள் இன்னும் முடியவில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46
news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46