(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விரைவில் மீண்டும் தீர்க்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டு, இணக்கப்பாட்டின் அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மறுசீரமைப்புகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தேசிய சவாலை எதிர்கொள்வதற்காக , வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் , மறுசீரமைப்பதற்காகவும் நாம் தயாராகவுள்ளோம்.
எனவே ஜனாதிபதியுடன் மேலும் கலந்துரையாவதற்கு நாம் தயார். அதற்கமைய எதிர்வரும் சில தினங்களுக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தீர்க்கமான கலந்துரையாடலை முன்னெடுத்து , நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் , வழிமுறைகள் தொடர்பிலும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் எமது ஒத்துழைப்புக்களை வழங்க தயார்.
வேலைத்திட்டங்களுக்கே நாம் எமது ஒத்துழைப்புக்களை வழங்குவோம். அதிகளவான அமைச்சர்களை நியமித்தாலோ அல்லது அவர்களுக்கான சிறப்புரிமைகளுக்காக மக்கள் மீது வரிசுமையை சுமத்தினாலோ அவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது.
மாறாக இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் அது மக்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டங்களை காட்டிக் கொடுப்பதாகவே அமையும்.
தற்போதைய ஜனாதிபதி பதவியேற்பதற்கான வழியை உருவாக்கிக் கொடுத்தது , மக்களின் அந்த எழுச்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியையும் இரு ஆண்டுகளில் பதவி விலகச் செய்ததும் இந்த மக்கள் எழுச்சி போராட்டங்களே ஆகும்.
எனவே மக்களை மறந்து எம்மால் வேறு பயணத்தை மேற்கொள்ள முடியாது. நாம் மக்கள் சார்பாகவே நிற்போம். மாறாக பதவியேற்பவர் சார்பிலோ அல்லது பதவியை வழங்குபவர் சார்பிலோ அல்ல.
தனிநபர் அரசியலிலிருந்து விடுபட வேண்டும். தேசிய அரசியல் மற்றும் தேசிய இலக்கை இலக்காகக் கொண்டு நாம் எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
இந்த முற்போக்கான பொறிமுறையின் கீழ் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். இதற்காக அமைச்சுப்பதவிகளை ஏற்பதற்கு நாம் தயாராக இல்லை. அமைச்சுப்பதவிகளை ஏற்பதால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM