( எம்.எப்.எம்.பஸீர்)
பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் வர்த்தகர் ஜொனதன் மார்டின்டைன்ஸ் ஆகியோரிடம் இன்று ( 17) எட்டரை மணி நேரம் விசாரணை நடாத்தப்ப்ட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று காலை 9.00 மணிக்கு அழைக்கப்பட்ட அவர்களிடம் மாலை 5.30 மணி வரை விசாரணை நடாத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அதன் பின்னர் அவ்விருவரும் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 9 ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டின் மீதான தாக்குதல் குறித்து விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் தாக்கல் செய்த மனுவும் உள்ளடங்கும். அம்மனுக்களிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த, முன்னாள் அமைச்சர் பசில் உள்ளிட்டோரின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM