ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் வாழ்த்து

Published By: Digital Desk 3

17 Aug, 2022 | 04:09 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியல் ஸ்திரத்தன்மை, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயன்முறைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் விரைவாக முன்னேற்றமடையும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்றதற்கு எமது அரசாங்கம் மற்றும் ஜப்பான் மக்கள் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல வருடங்களாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நீங்கள் இம்முறை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமை எனக்கு உற்சாகமளிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுவதையும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறைகள் உங்கள் தலைமையின் கீழ் விரைவாக முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கிறேன்.

பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் தற்போது நிலவும் நெருக்கடியை விரைவில் சமாளிக்கும் என்று நம்புகின்றேன். நமது இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70 வது ஆண்டு நிறைவையொட்டி, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ - பசிபிக் ஒன்றை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு உங்களுடன்  இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். '

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13