(எம்.மனோசித்ரா)
அரசியல் ஸ்திரத்தன்மை, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயன்முறைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் விரைவாக முன்னேற்றமடையும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்றதற்கு எமது அரசாங்கம் மற்றும் ஜப்பான் மக்கள் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல வருடங்களாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நீங்கள் இம்முறை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமை எனக்கு உற்சாகமளிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுவதையும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறைகள் உங்கள் தலைமையின் கீழ் விரைவாக முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கிறேன்.
பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் தற்போது நிலவும் நெருக்கடியை விரைவில் சமாளிக்கும் என்று நம்புகின்றேன். நமது இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70 வது ஆண்டு நிறைவையொட்டி, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ - பசிபிக் ஒன்றை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். '
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM