உள்ளூர் கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரிப்பாளரும், இயக்குநருமான பா. ரஞ்சித் தயாரிப்பில் பெயரிடப்படாத புதிய திரைப்படம் தயாராகிறது. இதில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஜெய்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு பாக்கியராஜ், ப்ரீத்வி பாண்டியராஜன், நடிகைகள் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ். ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன், லெமன் லீப் கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கணேசமூர்த்தி இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர்களை தவிர்த்து, உள்ளூர் அளவில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள், அவர்களுடைய வாழ்வியல், அவர்களின் நட்பு ஆகிய விடயங்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கி இருக்கிறது. தமிழக நகரான அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படபிடிப்பு நடைபெற்று வருகிறது'' என்றார்.
படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விளையாட்டு துறை ரீதியான வாய்ப்பு குறித்து பேசும் படைப்பு என்பதாலும், இந்த படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM