சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 10 பேர் கைது

Published By: Vishnu

17 Aug, 2022 | 12:09 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது தலைமன்னார், குருசைப்பாடு பிரதேச கடற்பரப்பில் இருந்து வெளிநாட்டு சட்டவிரோதமாக பயணிப்பதற்கு முயன்ற படகை செலுத்தியவர்கள் இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களுள் 18 மேற்பட்ட 4 ஆண்கள் 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைந்த 4 சிறுவர்கள் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் பேசாளை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03
news-image

9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்களின்...

2025-02-18 19:08:47
news-image

பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி...

2025-02-18 17:27:45
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள...

2025-02-18 17:27:52
news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47