தேவையான பொருட்கள்
இட்லி - 4
கடலைமா - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 3
குடைமிளகாய் - 2
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, வெ.பூண்டு விழுது - 1¼ டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தக்காளி சோஸ் - 20 மி.லி.
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - 1 கட்டு
செய்முறை
இட்லியை 4 துண்டுகளாக நறுக்கி, கடலை மா, உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் இட்லிகளை மொறுமொறுவென்று பொரித்தெடுக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாய், வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும். பின் இஞ்சி, வெ.பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சோஸ், மிளகுத் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின்பு இதில் பொரித்த இட்லியைச் சேர்த்து பிரட்டவும். கடைசியில் வெங்காயத்தாள் போட்டு இறக்கி அலங்கரித்து பரிமாறவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM