புத்தளத்தில் சட்டவிரோதமாக பெற்றோலைக் கொண்டு செல்ல முற்பட்டவர் கைது

Published By: Digital Desk 4

16 Aug, 2022 | 07:44 PM
image

புத்தளம் மதுரங்குளி பகுதியிலிருந்து முல்லைத்தீவு கோகிலாறு பகுதிக்கு பெற்றோலைக் கொண்டு செல்ல முற்பட்ட கெப்ரக வண்டியை புத்தளம் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

இன்று (16) பிற்பகல் இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி கெப்ரக வண்டியில் பெற்றோலைக் கொண்டு செல்வதாக பொலிஸ் விஷேடப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினருக்குத் தகவலை வழங்கியதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன்போது 2 பெரல்களில் 400 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாகவும் கெப்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பெற்றோல் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவந்திருக்கலாமென பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாக புத்தளம் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 13:51:24
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:49:47
news-image

குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி...

2025-02-19 12:02:47