(எம்.மனோசித்ரா)
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து , அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு அனைத்து கட்சிகளும் இணைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். மாறாக அரசாங்கம் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்குமெனில் மீண்டும் எதிர்ப்புக்களுக்கு உள்ளாக நேரிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பு 15, ஸ்ரீ நந்தாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் செவ்வாய்க்கிழமை (16) கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சர்வகட்சி அரசாங்கம் குறித்த எமது யோசனைகளை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நீக்கப்பட்ட அமைச்சரவை மீண்டும் நியமிக்கப்படுமாயின் நாட்டு மக்கள் அதன் மீது நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே தற்போதைய ஜனாதிபதி மக்கள் நம்பிக்கை கொள்ளும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.
புதிய அமைச்சரவையில் அங்கத்துவம் வகிப்பது தொடர்பில் இதுவரையில் நாம் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை. எமது தீர்மானங்களை நாம் கட்சி தலைவரிடம் முன்வைத்திருக்கின்றோம். நாம் முன்வைத்துள்ள முறைமைக்கு அமைய சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதில் பங்கேற்க தயாராக உள்ளோம். அதற்கு முன்னர் தேசிய சபை ஸ்தாபிக்கப்பட வேண்டியது முக்கியத்துவமுடையதாகும்.
கட்சி தலைவர்களை உள்ளடக்கிய குறித்த தேசிய சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைய ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் எமது அதிகபட்சி ஒத்துழைப்புக்களை வழங்குவோம். அத்தோடு புதிய அமைச்சரவையை ஸ்தாபிக்கும் போது , முக்கியமான நபர்களை அதற்காக பரிந்துரைப்பதற்கு சகல கட்சிகளும் முன்வர வேண்டும்.
அனைவருக்கும் பதவிகளை வழங்குகின்ற 30 - 40 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை நாம் எதிர்க்கின்றோம். எனவே மிகச் சிறிய அமைச்சரவையை நியமித்து , முக்கியமான நபர்களை அதில் உள்வாங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை எனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாரிய தவறுகள் ஏற்படக் கூடும்.
நாட்டு மக்களுக்கு பாரிய அமைச்சரவை தேவையற்றது. அவர்களின் தேவை சிறிய அமைச்சரவை ஊடாக நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகும். சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து , அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான வெளிநாட்டு கொள்கைகளைப் பின்பற்றி , அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும். தற்போதைய நெருக்கடிகளிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் , எடுக்கும் தீர்மானங்கள் தவறானவையாகவே அமையும். அரசாங்கம் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்குமெனில் மீண்டும் மக்களின் எதிர்ப்புக்களுக்கு உள்ளாகக் கூடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM