Photo: @DeputyMultan/ Twitter
பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் பஸ் ஒன்றும் பவுசர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை முல்தான் அதிவேக வீதியில் எரிபொருள் பவுசருடன் லாகூரிலிருந்து கராச்சிக்குச் சென்ற பஸ் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்துள்ளது.
குறித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 06 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மற்றும் சடலங்கள் முல்தானில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பஸ் சாரதி தூங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில முதல்வர் சௌத்ரி பெர்வைஸ் இலாஹி இந்த வீதி விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கையை வரவழைத்து, பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குமாறு முல்தான் நகர ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM