பல புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான காரணத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என கலாநிதி குணதாச அமரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள தருணம் எங்களிற்கு கவலையளிக்கின்றது என அவர் தேசிய அமைப்புகளின் சம்மேளனங்களின் சார்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளை அடிப்படையாக வைத்து இவ்வாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது எனகலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சில புலம்பெயர் அமைப்புகள் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன் தங்களுடைய வேண்டுகோள்கள் தொடர்பில் பல வாக்குறுதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்திருந்தார்,தடைநீக்கமும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றா என குணதாச அமரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM