எம்மில் பலரும் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு சென்று வருவது சர்வசாதாரணமாகி விட்டது. இந்தியாவில் மினரல் வாட்டர் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. மத்தியத்தர வகுப் பினர் இதனை தினந்தோறும் அருந்துகின்றனர். இங்கு கூட சுற்றுலா பயணிகளுக்காக மினரல் வாட்டர் கிடைக்கிறது. இந்நிலையில் மினரல் வாட்டர் அருந்துவது நல்லதா? இல்லையா? என்ற குழப்பம் இருந்து வருகிறது.
முன்பெல்லாம் ஊர் தோறும் நல்ல தண்ணீர் கிணறுகள், குளங் கள், நீர் தேக்கங்கள் என பல வடி வங்களில் நீர் சேமிக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக கிடைத்தன. ஆனால் இன்றோ சுற்று சூழல் மாசின் காரணமாக தண்ணீர் ரசாயனம் கலக்கப்பட்டே கிடைக்கிறது.சுத்தமான தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிட்டது. இந்நிலையில் நல்ல தண்ணீரை பெறுவது எப்படி? என்று கூட சிலர் கேட்கத் தொடங்கிவிட்டனர். தொழிற்சாலைகளின் எண் ணிக்கை அதிகரிப்பு, தொழிற் சாலைகளின் கழிவுகள், காடுகள் அழிப்பு, சுற்று சூழலில் மாசடைந்த காற்று இவற்றால் நல்ல தண்ணீர் வளங்கள் அழிந்து, குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது.
மற்றொரு புறம் தாராளமயமாக்கல் மற்றும் உலக மயமாக்கல் போன்ற வணிகக் கொள்கைகளில் தண்ணீர் ஒரு வணிக பொருளாக பாவிக்கும் போக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் கொர்ப்பரேட் முதலாளிகள் உலகம் முழுவதும் நல்ல தண்ணீர் பற்றாகுறை என்று கூறி, மினரல் வாட்டரை தயாரித்து, அதனை லாபத்துடன் விற்கத் தொடங்கி விட்டனர்.
இவர்கள் தயாரிக்கும் மினரல் வாட்டரில் தான் ஆர்கட்னாகுளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் என்ற நச்சு பூச்சிக் கொல்லி மருந்துகள் கலக்கப்படுகிறது. இதை அருந்தினால் புற்று நோய் ஆபத்து வரக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. அப்படி யானால் எம்மால் சுத்தமான குடிநீரை அருந்த இயலாதா? என கேட் கலாம். இன்றைய திகதியில் நாம் நல்ல தண்ணீரை அருந்த வேண்டும் என்றால், கிடைக்கும் தண்ணீரை தரமான ஃபில்டர் ஒன்றை வைத்து சுத்திகரித்துக் கொண்டு, அதன் பின் அதனை சூடவைத்து ஆற வைத்து குடிப்பதே சிறந்தது. ஒரு சிலர் இதற்கும் மேல் சென்று அந்த தண்ணீரில் சிறிது சீரகத்தையோ அல்லது பெருஞ்சீரகத்தையோ போட்டு வைத்துக் கொண்டு அதனை அருந்தினால் உட லுக்கும் வயிற்றுக்கும் எந்த பின்விளைவும் வராது. தண்ணீரும் சுத்த மாக இருக்கும்.
டாக்டர் இந்திரா
ஊட்டச்சத்து நிபுணர்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM