காணி பெறுமதி எல்லையை 20 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை

Published By: Ponmalar

09 Nov, 2016 | 06:29 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி பெறுமதி எல்லையை 20 இலட்சம் வரை அதிகரித்துள்ளோம். இதற்காக விசேட மத்தியஸ்த சபையொன்றை நிறுவியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமாதானம் ஏற்படுத்தப்படாமையினால் சர்வதேச தலையீடுகள் ஏற்பட்டது. எனவே இனிமேலும் இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வினை கண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மத்தியஸ்த சபையின் 25 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் சமாதானம் மற்றும் சமத்துவம் ஏற்படுத்தப்படாமையின் காரணமாக சர்வதேச தலையீடுகள் அதிகரிக்க ஆரம்பித்தது. இதன்காரணமாக இலங்கை தேசம் சர்வதேசத்தினால் முடக்கப்பட்டது. ஆனாலும் தற்போது வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு வருகின்றோம். தற்போது எமது செயற்பாடுகளுக்கு சர்வதேசம் முழுமையாக ஆதரவினை நல்கி வருகின்றது. 

அத்துடன் யுத்ததிற்கு பின்னர் வடக்கு கிழக்கு காணி பிரச்சினை விடயத்தில் தேசிய மத்தியஸ்த சபையொன்றை நிறுவியுள்ளோம். இதன்போது காணி பெறுமதி எல்லையை 20 இலட்சம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22