வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களது குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கிய நிர்வாகம்

Published By: Vishnu

11 Aug, 2022 | 01:37 PM
image

நாவலப்பிட்டி கெட்டபுலா ஓயாவில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் காணாமல்போயிருந்தனர்.

கெட்டபுலா தோட்ட புதுக்காடு அக்கரவத்தை ஆகிய பிரிவுகளில் வசித்துவந்த 36 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான அம்மாவாசி சந்திரமோகன், 49 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சத்தியசீலன் சுரேஸ் குமார் மற்றும் 3 பிள்ளைகளின் தாயாக ஜெயராம் ஜெயலட்சுமி ஆகியோரே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

கெட்டப்புலா தோட்டமானது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கி வருகின்றது.

நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ள மேற்குறிப்பிட்ட மூன்று தொழிலாளர் குடும்பங்களுக்கும் காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் சார்பில் இழப்பீடுகள் வழங்கப்பட்டதுடன் காணாமல்போன நபர்களினது பிள்ளைகளின் முழுமையான கல்விச்செலவினையும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்போது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாக இயக்குனர் சமிந்த குணரட்ன, கெட்டபுலா தோட்ட பொறுப்பதிகாரி சமிந்த சில்வா, இம்புள்பிட்டிய தோட்ட அதிகாரி கசுன் காரியசம் ஆகியோர் காணாமல்போனவர்களது உறவினர்களிடம் இழப்பீடுகளை வழங்கி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59