மாகாணங்களின் நிர்வாக பொறுப்பு ஆளுனர்களிடம் கையளிப்பு

Published By: Digital Desk 3

11 Aug, 2022 | 01:09 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைகள் செயற்படாத பின்புலத்தில் , மாகாணங்களின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கும் , மாகாணசபைகளின் செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்குமான பொறுப்பு ஆளுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய , ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சகல மாகாண ஆளுனர்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சவால் மிக்க காலப்பகுதிக்குள் அரச செலவுகளைக் கட்டுப்படுத்தி , பொது மக்கள் சேவைகளை உரிய முறையில் பராமறிப்பது அவசியமானதாகும்.

மாகாணசபை நிர்வாகம் , அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மாகாணசபைகளின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் போது தேசிய கொள்கை மற்றும் முன்னுரிமைகளுக்கு அமைவாக செயற்படுவது அவசியமாகும்.

தமது மாகாணங்களின் அபிவிருத்தி முன்னுரிமைகளை இனங்காணும் போதும் , அத்தோடு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் போதும் ஆளுனர்கள் குறித்த மாகாணத்திலிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகத்துடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கொருமுறை தமது மாகாணங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து , மாகாணசபைகளின் ஊடாக செயற்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டான காலப்பகுதியில் தேசிய இலக்குகளை அடைவதற்கு ஆளுநர்களின் பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43