மின் கட்டண அதிகரிப்பானது மக்களை மின்சார கதிரையில் ஏற்றியுள்ளது - அதிகரிக்க வேண்டாமென கிரியெல்ல கோரிக்கை

Published By: Vishnu

10 Aug, 2022 | 02:55 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரச தலைவர்களை மின்சார கதிரையில் ஏற்றப்போவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது மின்சார கட்டணத்தை அதிகரித்து மக்களை மின்சார கதிரையில் ஏற்றியுள்ளது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி புதன்கிழமை ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி அவர் குறிப்பிடுகையில்,

மின்சார கட்டணம் நூற்றுக்கு 75வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் அது நூற்றுக்கும் அதிக வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது இந்தளவு பாரிய தொகையை அதிகரித்தால் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது? மக்களின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

அத்த்துடன் அரச தலைவர்களை மின்சார எதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக தெரிவித்தே  இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் தற்போது இவர்கள் மின்சார கட்டணத்தை அதிகரித்து மக்களை மின்சார கதிரையில் ஏற்றி இருக்கின்றனர்.

அதனால் அதிகரிக்கப்பட்டிருக்கும் மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றுக்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விவாதம் முடியும் வரைக்கும் மின்சார கட்டணம் அதிகரிப்பதை இடை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

அதனை தொடர்ந்து எழுந்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதற்கு பதிலளிக்கையில், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

இன்னும் நடைமுறைப்படுத்த வில்லை. அதனால் அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு தயார் என்றார்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் இதற்கு பதிலளிக்கையில், இதுதொடர்பாக விவாதம் நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38