(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரச தலைவர்களை மின்சார கதிரையில் ஏற்றப்போவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது மின்சார கட்டணத்தை அதிகரித்து மக்களை மின்சார கதிரையில் ஏற்றியுள்ளது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி புதன்கிழமை ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி அவர் குறிப்பிடுகையில்,
மின்சார கட்டணம் நூற்றுக்கு 75வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் அது நூற்றுக்கும் அதிக வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது இந்தளவு பாரிய தொகையை அதிகரித்தால் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது? மக்களின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
அத்த்துடன் அரச தலைவர்களை மின்சார எதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஆனால் தற்போது இவர்கள் மின்சார கட்டணத்தை அதிகரித்து மக்களை மின்சார கதிரையில் ஏற்றி இருக்கின்றனர்.
அதனால் அதிகரிக்கப்பட்டிருக்கும் மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றுக்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
விவாதம் முடியும் வரைக்கும் மின்சார கட்டணம் அதிகரிப்பதை இடை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
அதனை தொடர்ந்து எழுந்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதற்கு பதிலளிக்கையில், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
இன்னும் நடைமுறைப்படுத்த வில்லை. அதனால் அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு தயார் என்றார்.
அதனைத்தொடர்ந்து சபாநாயகர் இதற்கு பதிலளிக்கையில், இதுதொடர்பாக விவாதம் நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM