கேள்வி:
எனக்கு வயது 23. திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன்னும் கருத்தரிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. வைத்திய பரிசோதனை செய்துகொண்டபோது பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்கள். எனது உயரம் 5.6 அடி. எடை 70 கிலோ. கருத்தரிப்பதற்கு இயற்கை வைத்திய முறை எதையாவது கூறவும். அதேபோல் மாதவிடாய் ஏற்பட்ட எத்தனையாவது நாளில் நாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று (அதாவது நான் கருத்தரிப்பதற்கு ஏற்ற நாள்) கூறவும்.
பதில்:
உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று வைத்தியர் சொல்லிவிட்டாரல்லவா! அதை முழுமையாக நம்புங்கள். உங்களது உயரம், எடை என்பன மிக மிக சரியான அளவிலேயே இருக்கின்றன. உங்களது வயது கூட உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஆகையால், எந்தப் பிரச்சினையும் இல்லை. வீண் கவலைகள் வேண்டாம். கருத்தரிக்காததற்கு பல காரணங்கள் இருக்கலாம், காரணங்கள் இல்லாமலும் இருக்கலாம். உங்களது விடயத்தில் காரணங்கள் எதுவும் இல்லை போலும். நீங்கள் கருத்தரிப்பதற்கான நேரம் குறித்துக் கேட்டிருக்கிறீர்கள். எனவே, அதில் ஏதும் குளறுபடிகள் இருக்கலாம்.
உங்களுக்கு மாதவிடாய் சீராக வருகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதற்கு சில மாதங்கள் மட்டும் மருந்து எடுத்துக்கொண்டு குணப்படுத்திவிடலாம்.
பொதுவாகவே மாதவிடாய் தோன்றிய பத்தாவது நாள் முதல் பதினேழு முதல் இருபதாவது நாள் வரை கருத்தரிப்பதற்கு உரிய காலம். அந்தக் காலகட்டத்தில் தான் கருமுட்டைகள் வெளியேறும். அந்தக் காலங்களில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். நீங்களும் இதுபோன்ற நாட்களில்தான் உறவு கொண்டிருக்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும், பரிசோதனை முடிவுகள் சாதகமாக இருப்பதால் இது குறித்து நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. முடிந்தவரை உங்கள் இருவருக்கும் இடையிலான அன்னியோன்னியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் கணவரும் தனியாகச் சில காலங்கள் சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு உங்கள் மீது இரக்கப்பட்டு உங்கள் பிள்ளை தந்திருக்கும் ஒரு கருணைக்கால இடைவெளி (Grace Period) தான் இது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM