(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எமது வேலைத்திட்டத்தையே ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை உரையாக முன்வைத்திருக்கின்றார். அதனால் அதற்கு நாங்கள் முழுமையாக ஆதரவளிப்போம்.
அத்துடன் அரசாங்கம் மூன்று வருடங்கள் செய்துவந்த தவறான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி அரை நிமிடங்களில் பின்னோக்கி எடுத்துச்சென்றிக்கின்றார் என லக்ஷ்மன் கிரியேல்ல தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தின் இடைக்கால நிர்வாகத்துக்கு எதிர்கட்சியின் ஆதரவு தேவை என்றால் காலவரையறை ஒன்றை ஜனாதிபதி தெரிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 09 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த கொன்கை உரை, அரசாங்கத்தின் 3 வருட வேலைத்திட்டத்தை முற்றாக பின்னோக்கி எடுத்துச் சென்றிருக்கின்றார். எமது வேலைத்திட்டத்தையே ஜனாதிபதி முன்வைத்திருக்கின்றார்.
அதனால் எமக்கு அதனை எதிர்க்க முடியாது. குறிப்பாக 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள கொண்டுவருமாறு நாங்கள் தெரிவித்து வந்தோம்.
பாராளுமன்ற துறைசார் மேற்பா்வைக்குழுவை மீள் ஸ்தாபிக்குமாறு தெரிவித்தோம். பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு தெரிவித்தோம்.
அரசாங்கம் இவை எதனையும் செய்யவில்லை. ஆனால் இன்று ஜனாதிபதி அவை அனைத்தையும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் கொள்கை உரை மூலம் கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தின் 3வருட வேலைத்தி்ட்டம் அர்த்தமற்றது என்பது தெளிவாகி இருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த தவறான வேலைத்திட்டத்தை மாற்றியமையக்க நாங்கள் 3வருடங்களாக எடுத்த முயற்சியை ஜனாதிபதி அரை மணி நேரத்தில் செய்திருக்கின்றார்.
மேலும் பிரச்சினைகளுக்கு தீரவுகாண ஜனாதிபதி இடைக்கால நிர்வாகத்துக்கு ஆதரவளிக்குமாறு கோரி இருக்கின்றார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு ஆதரவளிக்க நாங்கள் தயார்.
ஆனால் இடைக்கால நிர்வாகம் எவ்வளவு காலத்துக்கு என்று வரையறுக்கப்படவேண்டும். காலவரையறை தெரிவிக்காமல் ஜனாதிபதியின் இடைக்கால நிர்வாகத்துக்கு எதிர்க்கட்சியின் ஆதரவை பெறமுடியாது.
ஏனெனில் 2வருடங்களுக்கு இதனை இழுத்துக்கொண்டு செல்ல முடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் அமைத்து, அதனை செயற்படுத்திக்கொண்டு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு தேர்தலுக்கு செல்லவேண்டும் என்பதே எமது கோரிக்கை.
ஏனெனில் வங்குராேத்து அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவி செய்யப்போவதில்லை. புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறே சர்வதேச நாடுகள் கோரி வருகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM