அவசரகாலநிலைப்பிரகடனத்தை முழுமையாக நீக்குங்கள் - 'கோட்டா கோ கம'வில் பங்கேற்ற 5 உறுப்பு அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்

Published By: Vishnu

09 Aug, 2022 | 08:43 PM
image

(நா.தனுஜா)

தற்போது அமுலிலுள்ள அவசரகாலநிலையை உரிய முறைமையைப் பின்பற்றி நீக்குமாறும், அவசரகால வழிகாட்டல்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' போராட்டத்தில் அங்கம்வகித்த 5 அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டத்தில் அங்கம்வகித்த பிளக் கப்ஸ் மூவ்மென்ட் (கறுப்புத்தொப்பி இயக்கம்), பிளஸ் வன் - நாட்டுக்காக நானும் ஒருவன், சோஸலிச சகோதரத்துவம், அனைத்துக்கட்சிப் போராட்டக்காரர்கள் மற்றும் போராட்டக்களத்தில் இளைஞர்கள் ஆகிய 5 அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளன. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகாலநிலைப்பிரகடனத்தில் சோதனையிடுதல் மற்றும் கைதுசெய்தல் என்பன தொடர்பான குற்றவியல் சட்டக்கோவையின் 365 மற்றும் 365(அ) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த வாரம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இதுகுறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து அவசரகாலநிலைப்பிரகடனத்தில் இருந்து மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகள் நீக்கப்பட்டமைமை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.

இந்த சுமுகமான நிலைவரத்தை ஜனாதிபதி உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துடனும் நடாத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கான பச்சைக்கொடியாகக் கருதுகின்றோம்.

அவசரகாலநிலைப்பிரகடனத்தின் கீழான வழிகாட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும், நாமனைவரும் பொதுமக்கள் போராட்டத்துடன் தொடர்புடைய தரப்பினர் என்ற அடிப்படையில் அவசரகாலநிலைப்பிரகடனம் முழுமையாக நீக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.

 அதன்படி தற்போது அமுலிலுள்ள அவசரகாலநிலையை உரிய முறைமையைப் பின்பற்றி நீக்குமாறும், அவசரகால வழிகாட்டல்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும் நாம் வலியுறுத்துகின்றோம். 

அத்தோடு அவசரகாலநிலைப்பிரகடனம் நீக்கப்படும் வரை அதனை முன்னிறுத்தி பரவலாகவும் ஒன்றிணைந்தும் செயற்படுவோம் என்பதை மீண்டும் உறுதியாகக் கூறிக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37
news-image

கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-11 16:02:43