(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி தலைமையில் அமைப்பதற்கு திட்டமிட்டிருக்கும் சர்வகட்சி அரசாங்கத்தின் கால எல்லையை ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இதுவரை அது வெளிப்படுத்தப்படாமல் இருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அரசாங்கம் அமைக்கும் சர்வகட்சி அரசாங்கம் எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக பெரும்பாலான கட்சிகள் தெரிவித்திருக்கின்றன.
இதுதொடர்பாக ஜனாதிபதி அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி வருகின்றார். எமது கட்சியுடனும் கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடல்களின் போது ஜனாதிபதி பல விடயங்களை தெரிவித்திருந்தபோதும் சர்வகட்சி அரசாங்கம் செயற்படும் கால வரையறை தொடர்பில் தெரிவிக்கவில்லை.
ஏனைய விடயங்களைவிட சர்வகட்சி அரசாங்கத்தின் கால எல்லையை ஆரம்பமாக நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் எந்தவொரு கட்சியும் சர்வகட்சி அரசாங்கத்துக்காக குறுகிய காலத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். என்றாலும் நீண்டகாலத்துக்கு அவ்வாறு செயற்பட முடியாது.
ஏனெனில் அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொள்ளும் அடிப்படையில் மாத்திரமே செயற்பட முடியும்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் ஆட்சியின் இறுதிக்காலத்தில், சுமார் 6மாத காலம் என்ற குறுகிய காலத்துக்கு சர்வகட்சி அரசாங்கம் அமைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்து, நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்ததன் பின்னர், அந்த கால எல்லைக்குள் தேர்தலுக்கு செல்லவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் புதிய ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மேலும் 3வருடங்களுக்கு தேர்தல் எதுவும் நடத்துவதில்லை என தெரிவித்திருக்கி்ன்றார். அதனால் சர்வகட்சி அரசாங்கம் அமைத்தால் அதன் கால எல்லை தொடர்பில் பாரிய சந்தேகம் எழுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM