தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு சரியான விடயத்தை செய்யக்கூடியவர் யார் ? கருத்துக்கணிப்பில் மக்கள் தகவல்

Published By: Rajeeban

08 Aug, 2022 | 01:11 PM
image

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதில் சரியான விடயத்தை செய்வார்கள் என அரசியல் தலைவர்களை எவ்வளவு தூரம் நம்புகின்றீர்கள் என கேட்கப்பட்டமைக்கு மக்கள் அனுரகுமார திசநாயக்க(48.5) மீது அதிகளவான நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

ஜேவிபி தலைவரிற்கு அடுத்தபடியாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மீதும்(36.8) எதிர்கட்சி தலைவர் மீதும்(29.1) மீதும் மக்கள் அதிக நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் அனுரகுமார திசநாயக்க மீது அதிகளவு நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் சிங்களவர்கள் முஸ்லீம்களை விட தமிழர்களும் மலையகதமிழர்களும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு அதிக ஆதரவை வெளியிட்டுள்ளனர் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

சிங்களவர்களில் மூன்றில் ஒன்றை விட அதிகமானவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு ரணில் விக்கிரமசிங்க சரியானதை செய்வார் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிங்கள பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீது குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வைத்துள்ளனர்,ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவர்களாக டலஸ் அலகப்பெரும தினேஸ்குணவர்த்தன மகிந்;த ராஜபக்ச ஆகியோர் குறைவான மக்கள் ஆதரவையே பெற்றுள்ளனர் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு சரியான தீர்வை காணக்கூடியவர் என மக்கள் குறைந்தளவு நம்பிக்கை கொண்டுள்ள தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31