துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

Published By: Vishnu

08 Aug, 2022 | 08:43 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

லுனுகம்வெஹர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி  சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்கள் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி லுனுகம்வெஹர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இனந்தெரியாத சிலரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் லுனுகம்வெஹர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 31, 34, மற்றும் 57 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் லுனுகம்வெஹர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் திஸ்ஸமகாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பட்டுள்ளார்கள். 

சம்பவம் தொடர்பில் லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-22 06:08:19
news-image

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...

2025-04-22 01:51:07
news-image

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...

2025-04-21 23:18:09
news-image

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

2025-04-21 23:10:54
news-image

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...

2025-04-21 19:57:04
news-image

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...

2025-04-21 22:15:04
news-image

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...

2025-04-21 15:48:26
news-image

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...

2025-04-21 19:54:29
news-image

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...

2025-04-21 20:07:44
news-image

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...

2025-04-21 19:48:28
news-image

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...

2025-04-21 19:44:36
news-image

திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட...

2025-04-21 20:11:44