(எம்.வை.எம்.சியாம்)
லுனுகம்வெஹர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 4 ஆம் திகதி லுனுகம்வெஹர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இனந்தெரியாத சிலரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் லுனுகம்வெஹர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 31, 34, மற்றும் 57 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் லுனுகம்வெஹர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் திஸ்ஸமகாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM