தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம் - லக்ஷ்மன் கிரியெல்ல 

Published By: Digital Desk 4

07 Aug, 2022 | 03:23 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எதிர்க்கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரளிப்போம். அதற்காக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவேண்டிய தேவை இல்லை என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தோல்லிக்கு காராணத்தை வெளிப்படுத்தினார் லக்ஷ்மன் கிரியெல்ல |  Virakesari.lk

ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவி்க்கையில்,

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் கோரி இருக்கின்றது.

என்றாலும் சர்வதேச நாணய நிதியம்  இலங்கைக்கு கடன் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளில், 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருக்கின்றது.

நாட்டில் பல அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தில் இயங்குகின்றன. அவற்றை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது பாரியதொரு சவாலான விடயம்.

என்றாலும் அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் பிரேரணையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சி என்றவகையில், அதுதொடர்பில் ஆராய்ந்து தேவையான ஆதரவவை வழங்க முடியுமாகும்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி பெற்றுக்கொள்ள பாரிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி ஏற்படுகின்றது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அத்துடன் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியின்  தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்.

அதற்காக அரசாங்கத்துடன் இணையவேண்டும் என்ற தேவை இல்லை. ஏனெனில் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷ்வினரின் அழுக்குகளை சுத்தப்படுத்தும் குப்பை லாெறியாகும். அவ்வாறான அரசாங்கத்தில் இணைந்துகொள்ள எந்த தேவையும் இல்லை என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42