(எம்.மனோசித்ரா)
எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு அடுத்த வாரமும் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் வியாழனன்று பௌர்னமி என்பதால் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வெள்ளிக்கிழமை இணையவழியூடாக கற்பித்தலை முன்னெடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் அடிப்படையில் மறு அறிவித்தல் வரை வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் , புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழியூடாக கற்பித்தலை முன்னெடுக்குமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும் அடுத்த வாரம் வியாழனன்று பௌர்னமி என்பதால் வாரத்தின் முதல் மூன்று தினங்களில் கற்பித்தலை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் போக்குவரத்து நெருக்கடிகள் அற்ற பாடசாலைகளில் வெள்ளிக்கிழமைகளில் கற்பித்தலை முன்னெடுப்பது தொடர்பில் அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM