அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் காருக்குள் வைத்து சுயஇன்பம் அனுபவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதுடன் அவர் நாடு கடத்தப்படக்கூடிய நிலையை எதிர்கொண்டுள்ளார்.
26 வயதான இந்த இந்த நபர் நேபாளத்தைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு அவர் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தார்.
அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாநிலத்தின் தலைநகர் ஹோபார்ட்டில் உணவு விநியோக சாரதியாக அவர் பணியாற்றினார்.
ஒருநாள் தனது காலைநேர விநியோகம் முடிவடைந்தவுடன் வீதியோரத்தில் காரை நிறுத்திவிட்டு சுயஇன்பம் அனுபவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அங்கு மேற்படி கார் நிறுத்தப்பட முடியாது என்பதை தெரிவிப்பதற்காக நகரசபை ஊழியர் ஒருவர், காரின் அருகே சென்றபோது, சாரதியின் நடவடிக்கையை கண்டார்.
அதையடுத்து, அவரை அங்கிருந்து செல்லுமாறு நகரசபை ஊழியர்கள் கூறினர். எனினும் பின்னர், தடைசெய்யப்பட்ட நடத்தையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் தான் குற்றவாளி என மேற்படி இளைஞன் ஒப்புக்கொண்டார்.
இவ்வழக்கின் ஒரு பகுதியாக, அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதா, பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டுமா என்பது குறித்து ஆராயுமாறு தாஸ்மேனியா சமூக சீர்திருத்தச் சேiயிடம் கோரப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையில் அவர் பாலியல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இதனால் இந்நபர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் நிலையை எதிர்நோக்குகிறார் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், குறித்த இளைஞர் தொடர்பாக தாஸ்மேனிய சமூக சீர்திருத்தச் சேவையினால் தவறான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். உளவியல் நிபுணர்களான டாக்டர் கிராண்ட் பிளேக் மற்றும் டாக்டர் எம்மா கொலின்ஸ் ஆகியோரிடம் அறிக்கை பெற்று அதனையும் நீதிமன்றில் சட்டத்தரணி சமர்ப்பத்தார்.
மேற்படி இரு நிபுணர்களும், தாஸ்மேனிய சமூக சீர்திருத்தச்சேவையின் மதிப்பீட்டை நிராகரித்திருந்தனர். இவ்வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM