வருடத்தின் சிறந்த புலனாய்வு அதிகாரி என விருது வென்ற அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
43 வயதான கிறகரி டேனியல் பியூமர்சாசிஸ் எனும் இவர், கலிபோர்னியா மாநிலத்தின், சான்த அனா நகர பொலிஸ் அதிகாரியாக 11 வருடங்கள் கடமையாற்றியவர். பாரிய குற்றச்செயல்களுக்கு பதிலளிக்கும் பொலிஸ் குழுவில் இடம்பெற்றிருந்தவர் இவர்.
2019 ஆம் ஆண்டு வருடத்தின் சிறந்த புலனாய்வு அதிகாரியாக அவர தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எனினும் தற்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.
14 வயது சிறுமி என தான் கருதிய ஒருவருக்கு அவர் ஆபாசமான தகவல்களை பரிமாறியிருந்தார். 2021 டிசெம்பர் மற்றும் 2012 ஜனவரி காலப்பகுதியில் இத்தகவல்களை பரிமாறியிருந்தார்.
ஆனால், சிறுமியாக நடித்த மாறுவேடத்திலிருந்த உத்தியோகத்தர் ஒருவருடனேயே அவர் மேற்படி தகவல்களை பரிமாறியிருந்தார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
இதனால், அதிகாரிகளிடம் கிறகரி டேனியல் சிக்கிக்கொண்டார்.
அவரை கைது செய்வதற்கு பிடிவிறாந்து பிறக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவர் அதிகாரிகளிடம் சரணடைந்தார்.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கிறகரி டேனியல், ஒக்டோர் மாதம் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா மாநிலத்தின் ஓரிகன் கவுன்ரி வழக்குத்தொடுநர் டொட் ஸ்பிட்ஸர் விடுத்த் அறிக்கையொன்றில், “சமூகத்தை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் புனிதமான பொறுப்புகளை பொலிஸ் அதிகாரிகள் கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
“சத்தியப்பிரமாணம் செய்த பொலிஸ் அதிகாரி ஒருவர், சிறுமி என நம்பப்படுபவருடன் தகாத வகையிலான உரையாடல்களில் ஈடுபடுவது அதிர்ச்சிகரமானது.
தம்மை பாதுகாக்க வந்தவர்கள் என பிள்ளைகளுக்கு எம்மால் சொல்லப்பட்டாவர்களாலேயே இலக்குவைக்கப்படுவது குறித்து கவலையடையயும் நிலை பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது” எனவும் டொட் ஸ்பிட்ஸர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி கிறகரி டேனியல் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுவ துடன், பாலியல் குற்றவாளியாக அவரின் பெயர் பதிவுசெய்யப்பட வாய்ப்புள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM