(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 3000 இற்கும் அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, மாத்தளை, காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டங்களில் 3194 குடும்பங்களைச் சேர்ந்த 12 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 985 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதே வேளை 480 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் தென் மேற்கு பருவ பெயர்ச்சி காலநிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அத்தோடு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM