சீரற்ற காலநிலையால் 12 829 பேர் பாதிப்பு

Published By: Digital Desk 4

04 Aug, 2022 | 07:31 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 3000 இற்கும் அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, மாத்தளை, காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் 11 000 பேர் பாதிப்பு - மூவர் பலி : நால்வர் மாயம் - 9  மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை | Virakesari.lk

இம்மாவட்டங்களில் 3194 குடும்பங்களைச் சேர்ந்த 12 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 985 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதே வேளை 480 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் தென் மேற்கு பருவ பெயர்ச்சி காலநிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அத்தோடு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50