அடக்குமுறைகளை கைவிடுங்கள்; அரசை வலியுறுத்துகிறார் சஜித்

Published By: Vishnu

05 Aug, 2022 | 07:04 AM
image

(எம்.மனோசித்ரா)

மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட்டு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதனை விடுத்து துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும் மக்களின் போராட்டங்களை முடக்க முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 'சர்வகட்சி ஒன்றிணைவு' என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் தலைவர் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட்டு , அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

மக்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய உரிமை காணப்படுகிறது. வன்முறையற்ற ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமையை எவராலும் மீற முடியாது.

ஆனால் இந்த அரசாங்கம் அரச மிலேச்சத்தனத்தையும் , அரச பயங்கரவாதத்தையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றன எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்ற ரீதியில் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள சிவில் பிரஜைகளுக்கும் , தொழிற்சங்க தலைவர்களுக்கும் நிபந்தனைகள் இன்றி நாம் ஆதரவை வழங்குவோம்.

சந்தர்ப்பவாதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். மக்கள் ஆணைக்கு இந்தளவிற்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

மக்களிடம் நேரியாகச் சென்று அவர்களின் சுக துக்கங்கள் தொடர்பில் ஆராயுமாறு வலியுறுத்துகின்றோம். அதனை விடுத்து துப்பாக்கிகளாலும் , குண்டுகளாலும் மக்களை முடக்க முயற்சிக்க வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி, கண்டாவளையில் வெள்ளக்காடான வீதி :...

2023-12-01 12:00:47
news-image

இந்த வாரத்தில் மட்டக்களப்பில் இதுவரை பயங்கரவாத...

2023-12-01 12:02:06
news-image

முச்சக்கரவண்டிக் கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

2023-12-01 11:51:06
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2023-12-01 11:50:30
news-image

ரயில் விபத்தில் ஒருவர் பலி ;...

2023-12-01 11:50:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் -பிரிட்டனும்...

2023-12-01 11:29:11
news-image

சாரதி தூங்கியதால் விபத்து : ஒருவர்...

2023-12-01 11:27:12
news-image

தொடர்ந்து பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் -...

2023-12-01 11:04:44
news-image

களுத்துறையில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட...

2023-12-01 11:01:23
news-image

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி குறித்து பேசுகின்றோம்...

2023-12-01 10:50:23
news-image

பஸ் கட்டணத்தில் மாற்றமில்லையாம் !

2023-12-01 10:42:45
news-image

வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணி...

2023-12-01 10:19:43