சமையல் எரிவாயு தட்டுப்பாடு முழுமையாகக் குறைவடையும் - ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல

Published By: Vishnu

04 Aug, 2022 | 12:56 PM
image

(எம்.மனோசித்ரா)

உலக வங்கியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மற்றும் லிட்ரோ நிறுவனத்தின் முயற்சியினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய வெகுவிரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முழுமையாகக் குறைவடையும் என்று ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஜூன் 15 ஆம் திகதி முதித பீரிஸ் லிட்ரோ நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஓமான் வர்த்தக நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பின்னர் எமது நிபந்தனைகளுக்கு அவர்களை இணக்கம் தெரிவிக்க வைத்ததன் பின்னர் , எரிவாறு இறக்குமதிக்கான டொலரைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பின்னர் 20 நாட்களுக்குள் 33 000 தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோரது ஒத்துழைப்புடன் டொலரை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டன. அதற்கமைய உலக வங்கியிடமிருந்து 70 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

உலக வங்கியின் 70 மில்லியன் டொலர்களையும் , லிட்ரோ நிறுவனத்தின் 20 மில்லியன் டொலர்களையும் கொண்டு ஒக்டோபர் மாதம் வரை ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இதுவரையில் 30 000 தொன் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயுவிற்கான வரிசையைக் குறைக்கக் கூடியதாகவுள்ளது.

உலக வங்கியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் மேலும் சில நன்மைகளும் காணப்படுகின்றன. லிட்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 5 மாதங்களுக்கு கடனை செலுத்துகின்ற போதிலும் , திறைசேரியினால் உலக வங்கியின் கடனை செலுத்துவதற்கு 15 ஆண்டுகள் கால அவகாசம் காணப்படுகிறது. அதற்கமைய திறைசேரியில் மேலதிகமாக 22 மில்லியன் டொலர் இருப்பில் காணப்படும்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய லிட்ரோ நிறுவனத்தினால் விலை சூத்திரமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு முழுமையாக சீராக சில வாரங்கள்  செல்லக் கூடும். எவ்வாறிருப்பினும் வெகுவிரைவில் அந்த நெருக்கடிகள் முழுமையாக சரி செய்யப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46