சிலி நாட்டில் திடீரென ஏற்பட்ட பாரிய குழி குறித்து அந்நாட்டின் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஒரு டென்னிஸ் மைதானத்தைவிட பெரிய அளவில் இக்குழி உள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சான்டியாகோவிலிருந்து 800 கிலோமீற்றர் தூரத்திலுள்ள அட்டாகாமா பாலைவனத்தில் செப்புச் சுரங்கம் ஒன்றுக்கு அருகில் இந்த குழி ஏற்பட்டுள்ளது.
இதன் விட்டம் சுமார் 32 மீற்றர்கள் (104 அடி) ஆகும். சுமார் 60 மீற்றர் ஆழமுடையதாக இக்குழி உள்ளது என சிலியின் தேசிய பூகோளவியல் மற்றும் சுரங்க சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனடாவின் லுன்டின் மைனிங் நிறுவனத்தினால் நடத்தப்படும் அல்கபெரோசா சுரங்கத்துக்கு அருக்கில் இக்குழி ஏற்பட்டுள்ளது.
இக்குழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அது உறுதியாக உள்ளதாகவும் ஆட்களுக்கோ, உபகரணங்களுக்கோ, உட்கட்டமைப்புக்கோ சேதம் எதுவும் ஏற்படவில்லை என லுன்டின் மைனிங் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் நிலத்தரடி சுரங்கப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இப்பாரிய குழியைச் சுற்றி 100 மீற்றர் நீளமான பாதுகாப்பு வேலியொன்றை தியேரா அமாரில்லா நகரசபை அமைத்துள்ளது.
இக்குழி ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கும், அப்பகுதியிலுள்ள மக்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நிபுணர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என சிலியின் தேசிய பூகோளவியல் மற்றும் சுரங்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டேவிட் மொன்டேனெக்ரோ தெரிவித்துள்ளார்.
சுரங்க அகழ்வு நடவடிக்கைகளின் விளைவாக இக்குழி ஏற்பட்டதா அல்லது இதற்கு வேறு காரணம் உள்ளதாக என தெளிவுபடுத்துமாறு நாம் கோரியுள்ளோம் என அந்நகர மேயர் கிறிஸ்டைன் ஸுனிகா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM