இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது

Published By: Digital Desk 4

03 Aug, 2022 | 08:54 PM
image

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொது மக்கள் போராட்டங்களின் போது முன்னணி செயற்பாட்டாளராக விளங்கிய அவரை,    உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக் தலைமையில் இன்று (3) மாலை கோட்டையில் உள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்துக்கு திடீரென நுழைந்த சுமார் 50 வரையிலான பொலிஸார் ( நான்கு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் )  கைது செய்து அழைத்து சென்றனர்.

 இதன்போது கைதுக்கான காரணம் தொடர்பில், அங்குவந்த  பொலிஸ்  குழுவினரிடம், ஜோஸப் ஸ்டாலினும் ஊடகவியலாளர்கள் சிலரும் வினவிய போது, ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்வதாக அவர்கள் அறிவித்தனர். எனினும் ஆர்ப்பாட்டம் செய்வது குற்றமல்ல என இதன்போது ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்ததுடன், உண்மையான காரணத்தை கூறுமாறு கோரிய போதும் பொலிஸார் எதனையும் தெரிவிக்காமல் அவரை அழைத்து சென்றனர்.

 இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் வினவிய போது, கடந்த  மே 28 ஆம் திகதி, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் ஒன்றை மையப்படுத்தி  ஜோஸப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

 ஜோஸப் ஸ்டாலின் கைது செய்யப்படும் போது அதனை வீடியோ எடுத்த ஊடகவியலாளர்கள் சிலருக்கும் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

 இந் நிலையில், அவ்வாறு கைது செய்து அழைத்து செல்லப்பட்ட ஜோஸப் ஸ்டாலின் இன்று ( 3) இரவு கோட்டை பொலிஸ்  நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். நாளை அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸ்  தகவல்கள் தெரிவித்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் போதைப்பொருள்

2023-09-30 08:50:46
news-image

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி இராஜினாமா...

2023-09-30 08:54:35
news-image

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை...

2023-09-30 08:38:16
news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38