தேவையான பொருட்கள்
முழு உளுந்து - 1 கப்
தயிர் - 1 கப்
இஞ்சி – ½ அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 கப்
செய்முறை
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்துடன் அரை தேக்கரண்டி உப்பு, 2 பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து க்ரைண்டரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், ஒரு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அரைத்து எடுத்து தயிருடன் சேர்க்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு பொரித்து தயிருடன் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்ததும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரிக்கவும். வடை வெந்ததும் திருப்பிவிட்டு மற்றொரு புறத்தையும் வேகவிட்டு, எண்ணெயை வடித்து எடுக்கவும்.
வடைகளைத் தயார் செய்து வைத்திருக்கும் தயிரில் போட்டு அரை மணிநேரம் ஊறவிடவும்.
ஊறியதும் ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM