மேல்மாகாணத்தில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தமைக்காக 3084 பேருக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
521 பிரதேசங்கள் தீவிர டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரு வாரங்களாக மேல்மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவியது. இதன்காரணமாக டெங்கு நோய் பரவுவதற்கான அபாயம் தோன்றியுள்ளது. இதற்கமைய கொழும்பு மாநகரத்தை அண்டிய பிரதேசங்களில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 425 சுகாதார பரிசோதகர்கள் கடந்த மூன்று நாட்களாக தீவிரமான பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
மேற்குறித்த பரிசோதனையின் விளைவாக மேல்மாகாணத்தில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 3084 பேருக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, 521 பிரதேசங்கள் தீவிர டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதற்
கமைய சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக் குமாறு சுகாதார அமைச்சு வேண்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM