சீரற்ற காலநிலையால் 5 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் பலி, 3 பேரைக் காணவில்லை !

Published By: Digital Desk 3

02 Aug, 2022 | 01:54 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 5 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேரைக் காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலையை அடுத்து மஸ்கெலியா, பொல்பிட்டிய, நாவலப்பிட்டிய, ஹட்டன் ஆகிய பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களிலேயே 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.

பொல்பிட்டிய

பொல்பிட்டிய, ஹிதினேகம பிரதேசத்தில் நேற்று முன்பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வயோதிப பெண்ணும் (62) 5 வயது சிறுமியும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் நடத்திய தேடுதலின் போது குறித்த இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாவலப்பிட்டி 

இதேவேளை நாவலப்பிட்டி அக்கரவத்தை பகுதியில் கடம்புலவ ஆற்றை கடக்க முயன்ற இரு ஆண்களும் பெண் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

காணாமல் போனவர்கள் 36, 46 மற்றும் 47 வயதுடைய கடபுல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 

ஹட்டன்

இதேவேளை, மூவருடன் சென்ற நபர் ஒருவர் பன்மூர் ஏரியில் தவறி விழுந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனவர் ஹட்டனைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.

இந்நிலையில், காணாமல்போன நபருடன் வந்த ஏனைய இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மஸ்கெலியா 

இதேவேளை, மஸ்கெலியா - நோர்ட்டன் பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52