இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தாதி, 7 குழந்தைகளை கொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 32 வயதான லூசி லெட்பி எனும் இந்த யுவதி, செஸ்டர் நகரிலுள்ள வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றியவர்.
இவர் 5 பெண் குழந்தைகளையும் 2 ஆண் குழந்தைகளையும் கொலை செய்தார் என அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
2015 மார்ச் முதல் 2016 ஜூலை வரையான காலத்தில் இக்கொலைகள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் மேற்படி வைத்தியசாலையில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை சராசரியைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தது. இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டவுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
உரிய காலத்துக்கு முன்னர் பிறந்த பல குழந்தைகள் இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
மேற்படி காலப்பகுதியில் மேற்படி வைத்தியசாலையில் இடம்பெற்ற 17 குழந்தைகளின் மரணம் தொடர்பில் 2018 ஆண்டு லூசி லெட்பியின் வீட்டில் பொலிஸார் தேடுதல் நடத்தியிருந்தனர்.
தற்போது 7 குழந்தைகளின் மரணத்துக்கு லூசி லெட்பி காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்கொலைக் குற்றச்சாட்டுகளை லூசி லெட்பி நிராகரித்துள்ளார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM