(இராஜதுரை ஹஷான்)
சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 3 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றவுள்ள விசேட உரையில் தெளிவுப்படுத்துவார்.
தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள சகல தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தலதா மாளிகையில் 31 ஆம் திகதி மதவழிபாட்டில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் அங்கம் வகிக்கம் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வமான பேச்சவார்த்தையை முன்னெடுப்பார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி 03 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றவுள்ள விசேட உரையின் போது தெளிவுப்படுத்துவார். நாடு என்ற ரீதியில் சகல தரப்பினரும் தற்போதைய நிலையில் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
சகல நாடுகளுடன் நட்பு ரீதியாகவும்,வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.பொருளாதார மீட்சிக்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி இலங்கையில் உள்ள இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்ரதைகளை மேற்கொண்டுள்ளார்.அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு உண்டு.
நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டே சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.அரச நிர்வாகத்தை முறையாக முன்னெடுத்து செல்வது அவசியமாகும்.நீதிமன்றத்தின் அதிகாரத்தை எவருக்கும் தன்வசப்படுத்த முடியாது.வன்முறையான சம்வங்களை மாத்திரம் முடக்கியுள்ளோம்.ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM