(பெரியபோரதீவு நிருபர்)
பெற்றோல் நிரப்புவதற்கு வரிசையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காட்டுயானையொன்று அடித்து நொருக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
மட்டக்களப்பு, போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்புவதற்காக 28 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வேளையிலிருந்தே மோட்டார் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் 29 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு அப்பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று வரிசையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது தனது பலத்தைக் காண்பித்து துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காட்டு யானை அப்பகுதியிலுள்ள புன்னக்குளம் கிராமத்தினூடாக கடந்து வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அங்கு வரிசையில் வைக்கப்பட்டிந்த மோட்டார் சைக்கிள்களை துவம்சம் செய்ததில் 7 மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
அதில் 3 மோட்டார் சைக்கிள்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ஏனைய 4 மோட்டார் சைக்கிள்களும், பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்த்தர் தெரிவிக்கின்றார். இதனால் சுமார் 30 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றுவதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்குமாக பெற்றோல் இன்றி மிகவும் தவித்து வருகின்றோம். இந்நிலையில் பெற்றோல் நிரப்புவதற்காகவே எமது மோட்டார் சைக்கிள்களை வைத்தோம் எமது மோட்டார் சைக்கிள்களுக்கு தற்போது இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.
இதனால் எமது பிள்ளைகளின் கல்வியும், வாழ்வாதாரமும் பாதிப்படையும். இது எமக்கு மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்றுதான் உள்ளது. எமக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM