தபால் பொதிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றறதால் பணி நீக்கப்பட்ட தபால் ஊழியருக்கு இழப்பீடு

Published By: Digital Desk 5

29 Jul, 2022 | 02:12 PM
image

பிரிட்டனைச் சேர்ந்த தபால் ஊழியர் ஒருவர், மற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 131 தபால்பொதிகளை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 

எனினும், மேன்முறையீட்டையடுத்து அந்த ஊழியருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.வலசி ரமோஸ் எனும் இத்தபால் ஊழியர், லண்டன் நகரில் பணியாற்றி வந்தார்.

இவர் தனக்கு சுகவீனமாக உணர்ந்த ஒரு நாளில் தபால் பொதிகளை விநியோகிக்காமல் அவற்றை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டாராம்.

மறுநாள் மேற்படி தபால்களை அவர் தாமதமாக விநியோகிப்பதை வுலசி ரமோசின் சக ஊழியர்கள் சிலர் அவதானித்து, இது குறித்து மேலதிகாரிகளுக்குத்  தகவல் தெரிவித்தனர். 

அதையடுத்து தபால் பொதிகளை அனுமதியின்றி தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றதுடன், தபால் விநியோகத்தில் தாமதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில்  வலசி ரமோஸ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 

எனினும், தன்னை முன்னறியவித்தல் இன்றி பணியிலிருந்து நீக்கியதாக தொழில் பிணக்கு விசாரணை ஆணையகத்திடம் அவர் முறையீடு செய்தார்.

தனக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாகவும், மன அழுத்தத்தினால் தான் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ரமோஸ் கூறினார்.

இந்நிலையில், வலசி ரமோசை பணி நீக்கம் செய்தமை தவறானது என தொழில் பிணக்கு ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவருக்கு பிரித்தானிய தபால் திணைக்களம் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இழப்பீடு குறி;த்து மற்றொரு விசாரணை அமர்வில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04